பதில்:- 'அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தனக்கு நெருங்கிய ஒருப் பெண்ணை அன்சாரித் தோழர்களில் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். (அப்பொது) அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவிடம், 'திருமணம் நடத்துகிறாய். கேளிக்கை ஏதும் இல்லையா? அன்சாரிகளுக்கு கேளிக்கைப் பார்ப்பது மிகவும் விருப்பமானதாச்சே!' என வினவினார்கள்.
அறிவிப்பாளர்: உர்வா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி.
மதம், மார்க்கம் என இருந்தாலே அங்கு திருநாட்களும், பெருநாட்களும் இருக்கும்.
ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் சிலர் வாழ்கின்றனர். அவர்கள் இன்புறும் விதமாக திருநாளோ, பெருநாளோ அதில் இல்லை என்றால் அக் கோட்பாட்டிற்கு மதம் எனப் பெயர் சூட்டப்பட மாட்டாது.
ஒவ்வொரு மதத்தாரும் தத்தமது திருநாட்களைப் புதுப் பொலிவுன் கொண்டாடி மகிழவே ஆசைக் கொள்வர்.