திங்கள், 4 ஜூன், 2012

'அடித்தாலும் உதைத்தாலும் அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்!''


'அவருடைய பெயரும் அப்துல்லாஹ்தான்! அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு. ஆடுகளை மேய்ப்பது அவருடைய தொழில். இறைவனைப் பற்றியும் இறைத்தூதரைப் பற்றியும் தெரிந்து கொண்டவுடன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்.


ஆரம்ப காலத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதும் முஸ்லிமாக வாழ்வதும் இலேசான செயல்களாக இருக்கவில்லை. அடி, உதை, சித்திரவதை என்றுக் எல்லாவகையான தொல்லைகளுக்கும் ஆளாக வேண்டியிருந்தது. அல்குர்ஆனை ஓதவும் முடியாது; யாரிடமும் சொல்லவும் முடியாது.


இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர யாரும் மக்கா நகர மக்களுக்கு முன்னால் தைரியமாக குர்ஆனை ஓத முடியாத நிலை!